செந்தில் பாலாஜிக்கு ஜாமின்; நிபந்தனைகள் என்ன? அமைச்சர் ஆகலாமா?

Senthil Balaji | செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26, 2024) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.

Published on: September 26, 2024 at 11:01 am

Updated on: September 26, 2024 at 1:21 pm

Senthil Balaji | சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26, 2024) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீர்ப்பில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க. அரசின் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி ஜாமின் கோரி பலமுறை விண்ணப்பித்து இருந்தார். எனினும் அவருக்கு இதுவரை ஜாமின் வழங்கப்படவில்லை. அவரின் ஜாமின் 40க்கும் மேற்பட்ட முறை நிராகரிக்கப்பட்டது
செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்படும்பட்சத்தில் அவர் வகித்த இரு துறைகளில் ஏதேனும் ஒரு துறை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 470 நாட்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

நிபந்தனை என்ன?

“செந்தில் பாலாஜி வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும். 25 லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணை தொகையை வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. இன்று அல்லது நாளை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : குண்டர் சட்டம் ரத்து; சிறையில் இருந்து விடுதலை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு- சவுக்கு சங்கர் பேட்டி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com