‘மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை நான் சாக மாட்டேன்’: மல்லிகார்ஜூன கார்கே

Mallikarjun Kharge | நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் சாக மாட்டேன் என ஜம்மு காஷ்மீல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

Published on: September 29, 2024 at 6:57 pm

Mallikarjun Kharge | காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் மயங்கி விழுந்தார்.

இந்த நிலையில், ‘மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறக்கப் போவதில்லை. பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிருடன் இருப்பேன்” என்றார்.

தொடர்ந்து, “பிரதமர் தனது பேரணிகளின் போது ஜம்மு காஷ்மீரின் “இளைஞர்களின் எதிர்காலத்திற்காக பொய்க் கண்ணீர் வடித்தார்” என்றும் காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டினார். மேலும், “கடந்த 10 ஆண்டுகளில், ஒட்டுமொத்த நாட்டின் இளைஞர்களும் இருளில் தள்ளப்பட்டுள்ளனர், இதற்கு மோடியே காரணம்” என்றார்.

இதையடுத்து, “வேலையில்லாத் திண்டாட்ட புள்ளிவிவரங்கள் இப்போதுதான் வந்துள்ளன. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் மோடிஜியின் பங்களிப்பினால்தான் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசு துறைகளில் 65% பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு வேலைகள் ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி வேலைகளில் வெளியாட்களுக்கு வழங்கப்படுகின்றன” என்றார்.

மல்லிகார்ஜூன கார்கே உடல் நலக் குறைவினால் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மகன் பிரியங் கார்கே கூறினார். இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஜம்மு & காஷ்மீர் மாநிலம் ஜஸ்ரோட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

அவரது மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்துள்ளனர் மற்றும் சற்று குறைந்த இரத்த அழுத்தம் தவிர, அவர் நன்றாக இருக்கிறார். அனைவரின் அக்கறைக்கும் மிக்க நன்றி. அவரது உறுதியும், மக்களின் நல்வாழ்த்துக்களும் அவரை வலுவாக வைத்திருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : படுகொலைக்கு 4 நாள்கள் முன்பு.. ஜம்மு காஷ்மீர் இந்திரா ஆழமான பந்தம்: நினைவுக்கூர்ந்த பிரியங்கா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com