Delhi rains: டெல்லியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Delhi rains: டெல்லியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Published on: October 2, 2025 at 6:49 pm
புதுடெல்லி, அக்.2, 2025: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (என்.சி.ஆர்) அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை துறையின் தற்போதைய வானிலை அறிக்கையின்படி, டெல்லி மற்றும் நொய்டாவிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பும் டெல்லியில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. மேலும், விமான சேவை உள்ளிட்ட போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்றும் கனமழை பெய்யும் நிலையில் தசரா கொண்டாட்டங்கள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்.. கொலம்பியாவில் இருந்து மோடி அரசை தாக்கிய ராகுல் காந்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com