மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் பெயர் பரிந்துரை

சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Published on: November 18, 2024 at 4:41 pm

Justice D Krishnakumar | மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், அந்த பதவிக்கு டி கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி கிருஷ்ணகுமார், ஏப்ரல் 7, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் மே 21, 2025 அன்று ஓய்வு பெற உள்ளார்.

நீதிபதி டி. கிருஷ்ணகுமாரின் பெயரைப் பரிந்துரைக்கும் அதே வேளையில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில், தற்போது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மட்டுமே இருக்கிறார் என்பதையும் கொலிஜியம் எடுத்துரைத்துள்ளது.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே வெடித்த கலவரத்தில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் பாதுகாப்பு முகாம்களில் உள்ளனர். சமீப நாட்களாக மீண்டும் வன்முறை அதிகரித்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனால் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் கம்பெனி படைகள் செல்லும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க டெல்லியில் கடும் மாசு; மறு அறிவிப்பு வரும் வரை.. தொடக்க பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு.. 33 பேர் மரணம்.. மீட்புப் பணிகள் தீவிரம்! 33 killed in landslide in Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு.. 33 பேர் மரணம்.. மீட்புப் பணிகள் தீவிரம்!

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன….

ஜம்மு காஷ்மீரில் ரெட் அலர்ட்.. 10 பேர் உயிரிழப்பு.. மீட்புப் பணியில் ராணுவம்! Vaishno Devi Yatra route in Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீரில் ரெட் அலர்ட்.. 10 பேர் உயிரிழப்பு.. மீட்புப் பணியில் ராணுவம்!

Vaishno Devi Yatra route in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் பலத்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்….

அடுத்த 50 ஆண்டுகள் பாஜக ஆட்சி; அமித் ஷாவுக்கு எப்படி தெரியும்? ராகுல் காந்தி கேள்வி How does Amit Shah know that BJP will rule for the next 50 years says Rahul Gandhi

அடுத்த 50 ஆண்டுகள் பாஜக ஆட்சி; அமித் ஷாவுக்கு எப்படி தெரியும்? ராகுல் காந்தி கேள்வி

Rahul Gandhi: 50 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா; இது அவருக்கு எப்படி தெரியும்? என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com