5,620 கோடி மதிப்புள்ள 600 கிலோ போதைப்பொருள் அக்டோபர் 2ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது
5,620 கோடி மதிப்புள்ள 600 கிலோ போதைப்பொருள் அக்டோபர் 2ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது
Published on: October 11, 2024 at 8:48 am
Cocaine seized in Delhi | டெல்லியில் 200 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளது. டெல்லி ரமேஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள கிடங்கில் இருந்து ரூ.2000 கோடி மதிப்புள்ள சுமார் 200 கிலோகிராம் கோகோயின் கைப்பற்றப்பட்டது.
இந்தப் போதைப் பொருளை டெல்லிக்கு கடத்திய நபர் தற்போது லண்டனுக்கு தப்பிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் போதைப்பொருள் பாக்கெட்டுகள் நம்கின் பாக்கெட்டுகள் குடோனில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். டெல்லியில் கடந்த 2ஆம் தேதி ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது 200 கிலோ போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தெற்கு டெல்லியில் உள்ள மஹிபால்பூரில் உள்ள ஒரு குடோனில் இருந்து அக்டோபர் 2 ஆம் தேதி 5,620 கோடி ரூபாய் மதிப்பிலான 560 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், துஷார் கோயல் (40), ஹிமான்சு குமார் (27), அவுரங்கசீப் சித்திக் (23), பரத் குமார் ஜெயின் (48) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர், மேலும் இருவர் அமிர்தசரஸ் மற்றும் சென்னையில் இருந்து கைது செய்யப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com