அர்பன் நக்ஸல் தொடர்பு; போதைப் பொருள்- பொய் வாக்குறுதி: காங்கிரசை வாரிய நரேந்திர மோடி

Narendra Modi | காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்தது; அவர்களின் நிலையை மேம்படுத்தவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Published on: October 5, 2024 at 7:21 pm

Narendra Modi | காங்கிரஸை நகர்ப்புற நக்சல் கும்பல் நடத்துகிறது என்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் ஆபத்தான நிகழ்ச்சி நிரலை முறியடிக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்தது; அவர்களின் நிலையை மேம்படுத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய மோடி, “நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், நாட்டைப் பிரிக்கும் அவர்களின் செயல்திட்டம் தோல்வியடையும் என்று அவர்கள் (காங்கிரஸ்) நினைக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்து அவர்களை ஏழையாக வைத்திருக்க நினைக்கிறது. அவர்களுக்கு, மக்களை பிளவுபடுத்த மட்டுமே தெரியும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். நகர்ப்புற நக்சல் கும்பலால் காங்கிரசை நடத்துகிறது” என்றார்.

மேலும், “இந்தியா மீது நல்லெண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எவ்வளவு நெருக்கமாக நிற்கிறது என்பதை அனைவரும் பார்க்கலாம். சமீபத்தில் டெல்லியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஒருவரை சந்தேகிக்கிறார்கள்.
இளைஞர்களை போதைப்பொருளுக்குத் தள்ளி கிடைக்கும் பணத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸின் சிந்தனை அந்நியமானது” என்றார்.

இதையடுத்து, “பிரிட்டிஷ் ஆட்சியைப் போல், இந்த காங்கிரஸ் குடும்பமும் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினரைத் தங்களுக்குச் சமமாக கருதுவதில்லை. இந்தியாவை ஒரே குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பஞ்சாரா சமூகத்தை எப்போதும் இழிவான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்” என்றார்.

மேலும், “பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த துறவிகள் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை ஊக்கப்படுத்தினர். ஆங்கிலேயர்கள் சமூகத்தைத் துன்புறுத்தினர். காங்கிரஸ் நடத்தும் அரசுகள் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தையும், பாசனத் திட்டங்களையும் ஊழலுக்குப் பயன்படுத்தின.
அவர்களின் பொய் பிரசாத்தில் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். தெலுங்கானாவில் கடன் தள்ளுபடிக்காக மக்கள் இன்னும் காத்திருக்கின்றனர்.கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சியில் துவங்கப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களை, காங்கிரஸ் அரசு நிறுத்தியது” என்றார்.

இதையும் படிங்க

போதை இல்லா இந்தியா… பிரதமர் மோடி தொடங்கிய புதிய மக்கள் இயக்கம்! Nasha Mukt Bharat

போதை இல்லா இந்தியா… பிரதமர் மோடி தொடங்கிய புதிய மக்கள் இயக்கம்!

Nasha Mukt Bharat: ‘வளர்ந்த பாரதம்’ இலக்கை அடைய இளைஞர்கள் உடல், மன ரீதியாக வலிமையாக இருக்க வேண்டும் என்றும், போதைப்பொருட்களிலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை…

ஜூடோவில் வெள்ளி வென்று அசத்திய யாமினி மவுர்யா… குடியரசுத் தலைவர், பிரதமர் பாராட்டு! CWG Judo

ஜூடோவில் வெள்ளி வென்று அசத்திய யாமினி மவுர்யா… குடியரசுத் தலைவர், பிரதமர் பாராட்டு!

CWG Judo: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 57 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாமினி மவுர்யாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

இந்திய தடகளத்தில் புதிய வரலாறு… தேஜஸ்வின் சங்கருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து! CWG Bronze

இந்திய தடகளத்தில் புதிய வரலாறு… தேஜஸ்வின் சங்கருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

CWG Bronze: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்த தேஜஸ்வின் சங்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும்…

ஆந்திராவில் ரூ.5,640 கோடியில் பிரம்மாண்ட விமான நிலையம்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார் AP Airport

ஆந்திராவில் ரூ.5,640 கோடியில் பிரம்மாண்ட விமான நிலையம்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்

AP Airport : ஆந்திரப் பிரதேசம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் ரூ.5,640 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி…

‘அவதூறுகள் எதையும் தீர்ப்பதில்லை; வழி தவறியவர்களை நல்வழிப்படுத்துவோம்’.. பிரதமர் நரேந்திர மோடி! PM Modi Message

‘அவதூறுகள் எதையும் தீர்ப்பதில்லை; வழி தவறியவர்களை நல்வழிப்படுத்துவோம்’.. பிரதமர் நரேந்திர மோடி!

PM Modi Message: டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் போது சிலர் கடுமையான அவதூறு வார்த்தைகளால் பிரதமர் நரேந்திர மோடியை திட்டினார்கள். இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி,…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com