Bihar | பீகாரில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
Bihar | பீகாரில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
Published on: October 18, 2024 at 2:43 pm
Bihar | பீகாரின் சிவன் மாவட்டம் மற்றும் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய சிலர் வாந்தி மற்றும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கள்ளச்சாராயம் குடித்த 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிவன் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேரும், சரண் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உயர் சிகிச்சைக்காக 13 பேர் பாட்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பீகார் அரசின் மதுபான தடை கொள்கை தோல்வி அடைந்துவிட்டதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம் எனவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பீகார் துணை முதல் முதல்வர் விஜய் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க பீகாரில் கள்ளச் சாராயம்; 20 பேர் மரணம்: விசாரணைக்கு உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com