வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ; இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம்

RMC Chennai | Rain Alert | வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Published on: October 18, 2024 at 1:50 pm

RMC Chennai | Rain Alert | மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (17-10-2024) அதிகாலை வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

19.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21,10,2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34′ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

கர்நாடக கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க

கும்ப ராசி இதில் கட்டுப்பாடு தேவை: 12 ராசிகளின் இன்றைய (ஏப்.25 2025) பலன்கள்! Today Rasipalan prediction for all zodiac signs

கும்ப ராசி இதில் கட்டுப்பாடு தேவை: 12 ராசிகளின் இன்றைய (ஏப்.25 2025)

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 25, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…

‘காஷ்மீர் தாக்குதல் நெஞ்சம் பதறுகிறது’; ம.தி.மு.க வைகோ அறிக்கை MDMKs Vaiko says Kashmir attack is heartbreaking

‘காஷ்மீர் தாக்குதல் நெஞ்சம் பதறுகிறது’; ம.தி.மு.க வைகோ அறிக்கை

Vaiko: காஷ்மீரில் அப்பாவி இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்….

SBI அம்ரித் விருஷ்டி ஃபிக்ஸட் டெபாசிட் மீண்டும் அறிமுகம்; வட்டி, காலம் செக் பண்ணுங்க! SBI reintroduces Amrit Vrishti FD scheme

SBI அம்ரித் விருஷ்டி ஃபிக்ஸட் டெபாசிட் மீண்டும் அறிமுகம்; வட்டி, காலம் செக்

Amrit Vrishti FD scheme: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அம்ரித் விருஷ்டி என்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது….

திண்டுக்கல்லில் நிலநடுக்கவியல் அதிகாரிகள் ஆய்வு; என்ன காரணம்? Dindigul

திண்டுக்கல்லில் நிலநடுக்கவியல் அதிகாரிகள் ஆய்வு; என்ன காரணம்?

Dindigul: திண்டுக்கல்லில் அடிக்கடி வெடி சப்தம் கேட்பது ஏன் என்பது குறித்து நிலநடுக்கவியல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்….

மும்பை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு.. பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சியா? Pahalgam terror attack Security has been increased in Mumbai

மும்பை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு.. பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சியா?

Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் பல்ஹாம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, மும்பை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com