Bihar | பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி 20 பேர் மரணித்தனர்.
Bihar | பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி 20 பேர் மரணித்தனர்.
Published on: October 17, 2024 at 12:16 pm
Bihar | பீகார் மாநிலம் சிவானில் கள்ள மது அருந்தியதால் 20 பேர் உயிரிழந்ததாக எஸ்பி அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, சாப்ரா கண்காணிப்பாளர் குமார் ஆஷிஷ் கூறுகையில், “இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. எட்டு பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், உள்ளூர் சௌகிதார் மற்றும் பஞ்சாயத்து பீட் போலீஸ் அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மஸ்ரக் காவல் நிலையத்தின் தலைவர்யிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது” என்றார்.
இதற்கிடையில், பக்வான்பூர் காவல் நிலைய எஸ்.எச்.ஓ மற்றும் மதுவிலக்கு ஏ.எஸ்.ஐ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட மாஜிஸ்திரேட் முகுல் குமார் குப்தா தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கேள்வி
மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் எப்படி கிடைத்தது என்று நிதிஷ்குமார் மீது ஆர்ஜேடி கேள்வி எழுப்பியது. மக்கள் இறந்ததற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் பொறுப்பு என்று அக்கட்சி கூறியதுடன், மதுபான மாஃபியாக்களுக்கு மாநில அரசின் “பாதுகாப்பு” இருப்பதாகவும் குற்றம் சாட்டியது.
இது குறித்து, ஆர்ஜேடி பிரமுகர் மிருத்யுஞ்சய் திவாரி, “கள்ள சாராயம் குடித்து மக்கள் உயிரிழந்துள்ளனர். பீகாரில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்தும் கள்ள சாராயம் கிடைப்பது மிகுந்த வருத்தமும் கவலையும் அளிக்கிறது. ஒவ்வொரு முறையும் ஹோலி மற்றும் தீபாவளியின் போது மக்கள் எப்படி உயிரிழக்கிறார்கள் என்பது தெரிகிறது. போலி மதுபானம் காரணமாக, மதுபான மாஃபியாக்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு இருக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com