வீட்டில் பிணமாக கிடந்த கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்: மார்க்சிஸ்ட் திவ்யா மிரட்டல் காரணமா?

Kerala | Kannur | கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நவீன் பாபு வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் பிரமுகர் திவ்யா மீது புகார் எழுந்துள்ளது.

Published on: October 17, 2024 at 12:28 pm

Kerala | Kannur | சி.பி.ஐ (மார்க்சிஸ்ட்) தலைவரும் கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான PP திவ்யா ஒரு பொது நிகழ்ச்சியில் கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நவீன் பாபு பற்றி விமர்சித்த ஒரு நாள் கழித்து, அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார். பாபுவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தனம்திட்டாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக அவர் புதிய பொறுப்பை ஏற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இது நடந்துள்ளது.

மார்க்சிஸ்ட் திவ்யா பேச்சு

முன்னதாக, கண்ணூரில் திங்கள்கிழமை நடந்த பாபுவின் பிரியாவிடை நிகழ்வின் போது, ​​மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் பாண்டன் அவரை கவுரவித்தார். இந்த விழாவில் திவ்யா கலந்துகொண்டு, பாபுவின் பதவிக்காலம் குறித்த தனது விரக்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

அப்போது திவ்யா, “வேறு மாவட்டத்திற்குச் செல்லும் கூடுதல் மாஜிஸ்திரேட்டுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து, “தொழில்முனைவோர் (எரிபொருள் விற்பனை நிலைய விண்ணப்பதாரர்) பலமுறை என்னிடம் வந்து பிரச்னைகளை கூறுவார்கள். ஆனால் மாஜிஸ்திரேட் தடை இல்லா சான்றிதழ் வழங்கவில்லை. ஜிக்ஜாக் சாலையில் பிரச்னைகள் இருப்பதாக கூறினார்” என்றார்.

காங்கிரஸ் வலியுறுத்தல்

கண்ணூரில் உள்ள சி.பி.எம். திவ்யா சிபிஐ(எம்) மகளிர் பிரிவான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திவ்யா மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாபுவின் மனைவி மஞ்சுஷா, பத்தனம்திட்டா மாவட்டம், கொன்னியில் தாசில்தாராகப் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

11 ஆண்டுகளில் 469 மீனவர்கள் மரணம்.. கேரளத்தில் என்ன நடக்கிறது? Kerala Records 469 Fishermen Deaths

11 ஆண்டுகளில் 469 மீனவர்கள் மரணம்.. கேரளத்தில் என்ன நடக்கிறது?

Kerala : கேரளத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 469 மீனவர்கள் மரணம் அடைந்துள்ளார்கள். மேலும், 160 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது….

கேரள நடிகை மானபங்க வழக்கு.. இருவரின் தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! Kerala High Court

கேரள நடிகை மானபங்க வழக்கு.. இருவரின் தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!

Kerala High Court: 2017 கேரள நடிகை மானபங்க வழக்கில் குற்றவாளிகள் இருவரின் தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைக்க மறுத்துவிட்டது….

கேரளத்தின் வயநாட்டுக்கு ரெட் அலர்ட்.. நிலச்சரிவுக்கு ஒருவர் பலி.. பரபரப்பு தகவல்கள்! Red alert Kerala

கேரளத்தின் வயநாட்டுக்கு ரெட் அலர்ட்.. நிலச்சரிவுக்கு ஒருவர் பலி.. பரபரப்பு தகவல்கள்!

Red alert Kerala : கேரளத்தின் வயநாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது; நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்….

சபரிமலை கோவில் திருநடை நாளை திறப்பு.. விரதம் ஏற்ற பக்தர்கள்! Sabarimala Temple

சபரிமலை கோவில் திருநடை நாளை திறப்பு.. விரதம் ஏற்ற பக்தர்கள்!

Sabarimala Temple: கேரளத்தின் சபரிமலை ஐயப்பன் கோயில் மாதப் பூஜைகளுக்காக நாளை (ஜூன் 14, 2026) திறக்கப்படுகிறது….

கேரள போறீங்களா? கடும் மழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகள்? முழு விவரம் TN Weather

கேரள போறீங்களா? கடும் மழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்

Kerala on Heavy Rain Alert: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வரும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com