சென்னையில் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை

RMC Chennai | Rain Alert | சென்னையில் இன்று (அக்.17, 2024) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: October 17, 2024 at 12:05 pm

RMC Chennai | Rain Alert | “வடதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா. செந்தாமரைக் கண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில்), புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (அக்.17, 2024) பெய்யக் கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

18.10.2024

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

19.10.2024

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.10.2024

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21.10.2024 மற்றும் 22,10,2024

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன அதி கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கர்நாடக கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

மேகதாது அணை விவகாரம்… உச்சநீதிமன்றமே ஒரே வழி! – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உறுதி Mekedatu Row

மேகதாது அணை விவகாரம்… உச்சநீதிமன்றமே ஒரே வழி! – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும்…

ஆகஸ்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? ஐஎம்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு! TN Weather

ஆகஸ்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? ஐஎம்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு!

TN Weather: ஆகஸ்ட் மாதத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை…

தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து விபத்து… ஓட்டுநர், நடத்துநர் உட்பட 10 பேர் காயம்! Tuticorin Bus Accident

தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து விபத்து… ஓட்டுநர், நடத்துநர் உட்பட 10 பேர்

Tuticorin Bus Accident : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், வேன் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்ற அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில்…

7 சவரன் நகைக்காக 75 வயது மூதாட்டி கொலை… மகனையும் வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்! Woman Killed in namakkal

7 சவரன் நகைக்காக 75 வயது மூதாட்டி கொலை… மகனையும் வெட்டிவிட்டு தப்பிய

Woman Killed in namakkal: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் 7…

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்! Senthil Balaji

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற

Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி வி. மோகனா வழக்கில் இருந்து விலகியதால்…

விஜய்- டி.கே. சிவக்குமார் சந்திப்பு.. நேரம், தேதி உறுதி? TN–Karnataka CMs to Meet

விஜய்- டி.கே. சிவக்குமார் சந்திப்பு.. நேரம், தேதி உறுதி?

TN–Karnataka CMs to Meet : தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமார் சந்திப்பு நேரம் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com