Bihar Assembly Election : பீகாரில் 48 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Bihar Assembly Election : பீகாரில் 48 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on: September 30, 2025 at 8:53 pm
பாட்னா, செப்.30, 2025: பீகாரில் 2025 அக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்தியத் தேர்தல் ஆணையம் (EC) செவ்வாய்க்கிழமை பீகாருக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
இதில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்குவதற்கு முன்பு பட்டியலில் இருந்த 48 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, தேர்தல் ஆணைய அதிகாரி, “இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரின் விவரங்களை voters.eci.gov.in என்ற இணைப்பின் மூலம் சரிபார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
என்ன வித்தியாசம்?
தற்போது, இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடியாக காணப்படுகிறது. முன்னதாக, ஜூன் 24, 2025 அன்று 7.89 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர்.பின்னர் இறப்பு, குடியிருப்பு மாற்றம் மற்றும் நகல் உள்ளீடுகள் போன்ற காரணங்களுக்காக 65 லட்சம் பேர் விலக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 1 அன்று வரைவு எஸ்.ஐ.ஆர் பட்டியலில் 7.24 கோடி பேர் இருந்தனர். பரிசோதனையில் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்ட பின்னர் 3.66 லட்சம் பேர் மேலும் நீக்கப்பட்டனர்.ஆட்சேபனைகள் மற்றும் ஆய்வு செயல்பாட்டின் போது தகுதியானவர்கள் எனக் கண்டறியப்பட்ட பின்னர் 21.53 லட்சம் பெயர்கள் சேர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பீகாரில் 80,000 இஸ்லாமிய வாக்காளர்களை நீக்க முயற்சி.. பா.ஜ.க. மீது குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com