Puducherry | புதுச்சேரி, காரைக்காலில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Puducherry | புதுச்சேரி, காரைக்காலில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Published on: October 18, 2024 at 12:14 pm
Puducherry | புதுச்சேரியில் 85 சாராயக் கடைகளும், காரைக்காலில் 25 சாராயக் கடைகளும் உள்ளன. இந்த கடைகளில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கலால்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், புதுச்சேரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சாராய பாக்கெட்டுகளுக்கும் பொருந்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதுவை, காரைக்காலில் மீண்டும் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதித்து கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க பீகாரில் கள்ளச் சாராயம்; 20 பேர் மரணம்: விசாரணைக்கு உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com