ஆரஞ்சு ஜூஸ் இருந்தால் போதும்.. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய் ரெடி..!

Food: கடைகளில் கிடைக்கும் சுவையான ஜெல்லி மிட்டாய் வீட்டிலேயே செஞ்சி அசத்துங்க.

Published on: April 11, 2025 at 2:02 pm

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய் கடை ஜெல்லி மிட்டாய் வீட்டிலேயே பழங்களை வைத்து எளிமையாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

ஆரஞ்சு ஜூஸ் -½ கப்
ஜெலட்டின் பவுடர்- 5 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு -15 சொட்டு

சர்க்கரை பாகு தயாரிக்க

சர்க்கரை -1½ கப்
தண்ணீர் -¾ கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஜெலட்டின் பவுடரை எடுத்துக்கொண்டு அதில் ஆரஞ்சு ஜூஸை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும். ஜெலட்டின் பவுடருக்கு பதிலாக கடல்பாசியை பயன்படுத்தலாம். இதனை நன்கு கலந்து பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். சர்க்கரை பாகு தயாரிக்க ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

மூன்று நிமிடம் கொதிக்க ஆரம்பித்த பின்னர் சிறிது பாகுவை எடுத்து தண்ணீரில் சேர்த்து பார்க்கவும் பாகு கரைந்தால் இன்னும் பதம் வரவில்லை. பாகு கரையாமல் கையில் எடுக்கும் படி வந்தால் அது சரியான பதம். இந்த பதத்தில் அடுப்பு தீயை சிம்மில் வைத்து 15 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் ஏற்கனவே தயார் செய்து வைத்த ஜெலட்டினை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கட்டி விலாமல் கரைத்து விடவும்.

பின்னர் இதை எண்ணெய் தடவிய டிரேயில் மாற்றி 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஜெல்லி தயாரானதும் கத்தியை வைத்து விளிம்பில் கீரி ஜெல்லியை வெளியே எடுக்கவும். பின்னர் ஒரு சப்பாத்தி கட்டையில் சர்க்கரை தூவி அதன் மீது ஜெல்லியை வைத்து ஜெல்லி மீதும் சிறிது சர்க்கரை தூவி விருப்பமான வடிவில் கட் செய்து எடுத்துக் கொள்ளவும். இதேபோன்று திராட்சை, மாம்பழம், பைனாப்பிள் போன்ற பழங்களின் சாறு சேர்த்து இந்த ஜெல்லியை தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இதையும் படிங்க :வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டிலேயே சாக்கோபார் ஐஸ்கிரீம்.. ஈஸியா இப்படி பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com