UPSC CSE 2025; விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி; உடனே அப்ளை பண்ணுங்க!

UPSC CSE 2025: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC), சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

Published on: February 21, 2025 at 9:18 am

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான பதிவு தேதி இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.

முதலில் யுபிஎஸ்சி சிஎஸ்சி முதன்மைத் தேர்வு 2025க்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 11 ஆகும். இது பிப்ரவரி 18 வரை நீட்டிக்கப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக “CS(P)‐2025 & IFoS(P)‐2025க்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 21.02.2025 (மாலை 06:00 மணி) வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், திருத்தம் செய்வதற்கான 7 நாட்கள் கால அவகாசம் 22.02.2025 முதல் 28.02.2025 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

  • முதல் நிலை,
  • முதன்மைத் தேர்வு,
  • நேர்காணல்

முதன்மைத் தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை அடங்கும். தேர்வின் விரிவான பாடத்திட்டம் மற்றும் திட்டம் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.
பெண் வேட்பாளர்கள் மற்றும் SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி

  • யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in பக்கத்தை பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வு 2025 லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய புதிய பக்கம் தோன்றும்.
  • பதிவு செய்து முடித்த பிறகு, உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  • விண்ணப்பப் படிவத்தை நிரப்பி கட்டணத்தைச் செலுத்தவும்.
  • எதிர்கால தேவைக்காக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 979 காலியிடங்களை அறிவித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் ஒரு முறை பதிவு (OTR) செயல்முறையை முடிக்க வேண்டும். ஓடிஆர் சுயவிவரம் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். இதனால் ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை நேரடியாகத் தொடரலாம்.

இதையும் படிங்க இந்திய கடற்படையில் 270 பணிக்கு அழைப்பு.. உடனே செக் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com