Chinmayi Feared : கருப்பு படத்தில் திரிஷாவுக்கு பாடகி சின்மயி குரல் கொடுத்துள்ளார்; இது குறித்து அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
Chinmayi Feared : கருப்பு படத்தில் திரிஷாவுக்கு பாடகி சின்மயி குரல் கொடுத்துள்ளார்; இது குறித்து அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Published on: May 17, 2026 at 5:32 pm
சென்னை, மே 17, 2026: பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயி ஸ்ரிபாதா, ‘கருப்பு’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவுக்காக டப்பிங் செய்ததை வெளிப்படையாகச் சொல்ல அஞ்சியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ‘லியோ’ படத்தில் டப்பிங் செய்தபோது ஏற்பட்ட எதிர்வினைகள் காரணமாக, மீண்டும் அதே நிலை உருவாகுமோ என்ற பயம் அவருக்கு இருந்ததாகவும், சில காட்சிகள் அவருக்கு உணர்ச்சிகரமான நினைவுகளை தூண்டியதாகவும் கூறினார்.
கருப்பு திரைப்படம் சூர்யா–திரிஷா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கிய படமாகும். இந்தப் படத்தில் திரிஷாவின் ‘ப்ரீதி’ என்ற கதாபாத்திரத்துக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சில காட்சிகள் அவருக்கு கடந்த கால நினைவுகளை மீண்டும் தூண்டியதால், டப்பிங் செய்யும்போது அழுததாக தெரிவித்துள்ளார்.
அச்சம் ஏன்?
முன்னதாக, 2023-இல் ‘லியோ’ படத்தில் சின்மயி டப்பிங் செய்தபோது, தொழில்துறை சங்கங்களின் எதிர்ப்பு ஏற்பட்டது. முன்னதாக, 2018-இல் #MeToo இயக்கத்தில் பேசியதற்குப் பிறகு, தமிழ் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். இந்நிலையில் சின்மயி, “ஆர்.ஜே பாலாஜி மீது நம்பிக்கை வைத்ததற்காக நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, “இனி பயமின்றி வேலை செய்ய விரும்புகிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சின்மயி குரல் நடிப்புக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : நடிகர் ரவி மோகனுக்கு நடிகை மீரா சோப்ரா ஆதரவு.. யார் இவர் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com