Actress Kasthuri | நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாளை ( நவ. 12, 2024) விசாரணைக்கு வருகிறது.
Actress Kasthuri | நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாளை ( நவ. 12, 2024) விசாரணைக்கு வருகிறது.
Published on: November 11, 2024 at 9:54 pm
Actress Kasthuri | தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி நவபர் 3ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் நடிகை கஸ்தூரி (50) கலந்து கொண்டார். அப்போது தெலுங்கர்கள் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சை ஆகின.
தொடர்ந்து இந்த கருத்துக்களை திரும்ப பெற்ற நடிகை கஸ்தூரி, “தெலுங்கர்களை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல; எனது கருத்துக்களை முழுமையாக நான் திரும்பப் பெறுகிறேன்” என்றார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி மீது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக தெலுங்கு அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை எழும்பூரிலும், மதுரை திருநகர் காவல் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்தப் புகாரில் நடிகை கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை ( நவ. 12, 2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த மனு விசாரணைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. நடிகை கஸ்தூரி தற்போது வரை தலைமறைவாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘நான் பேசியதை திரித்து பொய் பரப்புரை’: நடிகை கஸ்தூரி ஆதங்கம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com