Udangudi | பள்ளி மாணவிகளுக்கு மது வழங்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக உடன்குடியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Udangudi | பள்ளி மாணவிகளுக்கு மது வழங்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக உடன்குடியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Published on: November 11, 2024 at 9:31 pm
Updated on: November 11, 2024 at 9:34 pm
Udangudi | உடன்குடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பொன்சிங். இவர் விளையாட்டுப் போட்டிகளுக்காக பள்ளி மாணவிகளை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பள்ளி மாணவிகளுக்கு மது அருந்த கூறியதாகவும்; மது அருந்திய சில மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இதற்கிடையில் பள்ளி ஆசிரியருக்கு எதிராக உடன்குடியில் போராட்டமும் வெடித்தது. இந்த நிலையில, உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங் தலைமறைவாகிவிட்டார் என்றும் கூறப்பட்டது. அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த பொன்சிங்கை போலீசார் கோவையில் வைத்து கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
பள்ளி மாணவிகளை மது அருந்த செய்து பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com