Abhishek Bachchan | அமிதாப்-ஜெயா தம்பதியரின் மகன் அபிஷேக் பச்சன். இவர் குரு, தூம், பணடி அவுர் பப்லி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மேலும், படத் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். இதுமட்டுமின்றி பிசினஸ் மற்றும் விளையாட்டு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திவருகிறார்.
இவர், 2007ல் ஐஸ்வர்யா ராய்-ஐ திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் மாதந்தோறும் அபிஷேக் பச்சன் எஸ்.பிஐ வங்கியில் இருந்து ரூ.18 லட்சம் பெறுகிறார். இது ஏன் என்று பார்க்கலாம்.
ரூ.18 லட்சம் பெறுவது ஏன்?
அபிஷேக் பச்சனின் ஆடம்பரமான ஜூஹு பங்களாவை எஸ்.பி.ஐ வாடகைக்கு எடுத்துள்ளது. இந்தப் பங்களாவின் மதிப்பு ரூ.280 கோடி என்று கூறப்படுகிறது. இதன் குத்தகை 15 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கி அபிஷேக் பச்சனுக்கு வாடகையாக ரூ.18 லட்சம் வழங்குகிறது.
இதனால் அபிஷேக் பச்சன் குடும்பத்துக்கு கணிசமான பணம் வாடகை மூலமாக வந்து சேர்கிறது.
இது தொடர்பான அறிக்கையில், பாரத ஸ்டேட் வங்கி. அபிஷேக் பச்சனுக்கு தற்போது வங்கியில் இருந்து மாத வாடகையாக ₹18.9 லட்சம் அளிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. குத்தகையில் குறிப்பிட்ட காலகட்ட வாடகை உயர்வுக்கான ஏற்பாடுகள் உள்ளன, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாத வாடகை ₹23.6 லட்சமாக உயரும், மேலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ₹29.5 லட்சமாக அதிகரிக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Dhurandhar box office record: தங்கல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களின் சாதனையை துரந்தர் திரைப்படம் சப்தமின்றி முறியடித்துள்ளது….
Definition of Love: காதலின் வரையறை காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் என நடிகை மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார்….
O Romeo Film: மும்பையில் வெளியாகவிருக்கும் இந்தி திரைப்படமான ‘ ஓ ரோமியோ (O Romeo)’ சட்ட சிக்கலை எதிர்கொள்கிறது….
Rani Mukerji Motherhood and Career: நடிகை ராணி முகர்ஜி, தனது மகள் அதிரா பிறந்த பிறகு மீண்டும் வேலைக்கு திரும்பிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்….
Border 2 worldwide box office collection Report: சன்னி தியோல், வருண் நடிப்பில் பார்டர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்