தமிழகத்தில் மீண்டும் சொத்து வரி உயர்வா? வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு

Vikramasinga Raja | தமிழகத்தில் மீண்டும் சொத்து வரி உயர்த்தபபடும் என்ற தீர்மானத்துக்கு வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Published on: September 28, 2024 at 7:30 pm

Vikramasinga Raja | தமிழகத்தில் மீண்டும் சொத்து வரி உயர்த்தபபடும் என்ற தீர்மானத்துக்கு வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் Ve.கோவிந்தராஜுலு விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சொத்துவரி பல மடங்காக உயர்த்தப்பட்டது. வணிகக் கட்டிடங்களுக்கு கூடுதலாக வரி விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. சொத்துவரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வுகளால் தொழில் மற்றும் வர்த்தகத்துறையில் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டு, அந்த பாதிப்பு நுகர்வோரையும் சேர்த்து பணச்சுமை மற்றும் மனச்சுமைக்கு உள்ளாக்கியது.

அச்சூழலில் இருந்து இதுவரை மீண்டுவர இயலாத நிலையில் தற்போது சென்னை பெருநகர மாநகராட்சியில் சொத்துக்களின் மீது 6% கூடுதல் வரி விதிப்புக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

கடந்த மாதம் பன்மடங்கு உயர்த்தப்பட்ட உரிமக்கட்டணமும், தொழில் வரியும் நீக்கப்பட வேண்டும் என்கின்ற பேரமைப்பின் கோரிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், மீண்டும் சொத்துவரி உயர்வு என்பது வணிகர்களுக்கு மிகப்பெரும் சுமை என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அரசுக்கு மிகவும் அழுத்தமாக தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏற்றப்படும் வரிச்சுமைகள் நிறைவாக நுகர்வோர்களையும், பொதுமக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி, இதனால் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்பட்டு, பொருளாதார தாக்கத்தை உருவாக்கும்.
மேலும், தொழில்-வணிக நலிவு காரணமாக வேலைவாய்ப்புகளும் பறிபோகும் நிலை உருவாகும்.

இது அரசுக்கு எதிர்ப்பான மனநிலையை வணிகர்கள், பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும் என்பதனால், உடனடியாக சொத்துவரி உயர்வை நிறுத்தி வைத்திட, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வணிகர்கள், நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துவதாக பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

டெல்லி; இந்திய வர்த்தகம் & தொழில்துறை கூட்டமைப்பு உச்சி மாநாடு! FICCI Hosts Bharat R and D Summit 2024

டெல்லி; இந்திய வர்த்தகம் & தொழில்துறை கூட்டமைப்பு உச்சி மாநாடு!

டெல்லியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை உச்சி மாநாடு வியாழக்கிழமை (செப்.4,2024) நடைபெற்றது….

15 நிமிடம் சார்ஜிங், 100 கிலோ மீட்டர் பயணம்: புதிய எலக்ட்ரானிக் சரக்கு வாகனம் அறிமுகம்! Euler Motors launches Storm EV

15 நிமிடம் சார்ஜிங், 100 கிலோ மீட்டர் பயணம்: புதிய எலக்ட்ரானிக் சரக்கு

Business | 15 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும், 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் வகையில் புதிய எலக்ட்ரானிக் சரக்கு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர்  இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com