Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் வள்ளியூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் குப்பைகளை சேகரித்த போது, ராஜ்குமார் என்பவர் மனிதக் கழிவு கலந்த குப்பைகளை எடுக்க கூறியுள்ளார் .
அதற்கு மீனா மறுக்கவே அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர் அடுத்த தெருவில் பணியில் இருந்தபோது, அந்தக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து பேசிய ராஜ்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
எனினும், தனது பேரனின் மனிதக் கழிவுகளை கொட்டச் சென்றது எனது தவறுதான் என்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. மேலும், அவர் என்னிடம் வேகமாக பேசினார். நான் அவரை திட்டவில்லை” என்றார். இந்தச் சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க
Nanguneri car-auto crash : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் பயணித்த ஆட்டோ மீது கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்….
Dadar–Tirunelveli trains curtailed : திருநெல்வேலி யார்டு சீரமைப்பு பணிகள் காரணமாக முக்கிய ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது….
Kudankulam lawyer tragedy : திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில், வீட்டை சுத்தம் செய்தபோது காம்பவுண்ட் சுவரில் இருந்து விழுந்து வழக்கறிஞர் தீபிகா உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Ambasamudram By‑poll : அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் மு. அப்பாவு விருப்பம் தெரிவித்துள்ளார்….
SDPI : சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் கொண்டுவரும் திட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்