Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் வள்ளியூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் குப்பைகளை சேகரித்த போது, ராஜ்குமார் என்பவர் மனிதக் கழிவு கலந்த குப்பைகளை எடுக்க கூறியுள்ளார் .
அதற்கு மீனா மறுக்கவே அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர் அடுத்த தெருவில் பணியில் இருந்தபோது, அந்தக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து பேசிய ராஜ்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
எனினும், தனது பேரனின் மனிதக் கழிவுகளை கொட்டச் சென்றது எனது தவறுதான் என்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. மேலும், அவர் என்னிடம் வேகமாக பேசினார். நான் அவரை திட்டவில்லை” என்றார். இந்தச் சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க
Tirunelveli: திருநெல்வேலியில் கல்லூரி பேராசிரியர் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க நடந்த முயற்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது….
Tirunelvelis Radhapuram : ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் யார் வெற்றிப் பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது….
Kanimozhi campaign in Tisaiyanvilai: திசையன்விளை பஜார் பகுதியில் தி.மு கழக வேட்பாளர் மு. அப்பாவுக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார் கனிமொழி. அப்போது, அ.தி.மு.க. ஆட்சி வரப்போவது இல்லை…
Appavu Alleges Vijay Behind Cinema Ticket Racket: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தி.மு.க. வேட்பாளர் அப்பாவு…
Assembly Election 2026 : மக்கள் பணத்துல கை வைக்க மாட்டேன். இதை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் தவெக…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்