Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் வள்ளியூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் குப்பைகளை சேகரித்த போது, ராஜ்குமார் என்பவர் மனிதக் கழிவு கலந்த குப்பைகளை எடுக்க கூறியுள்ளார் .
அதற்கு மீனா மறுக்கவே அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர் அடுத்த தெருவில் பணியில் இருந்தபோது, அந்தக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து பேசிய ராஜ்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
எனினும், தனது பேரனின் மனிதக் கழிவுகளை கொட்டச் சென்றது எனது தவறுதான் என்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. மேலும், அவர் என்னிடம் வேகமாக பேசினார். நான் அவரை திட்டவில்லை” என்றார். இந்தச் சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க
Space Industry Zone : திருநெல்வேலி, தூத்துக்குடியில் விண்வெளித் துறை முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது….
Tirunelveli Ganja Seizure: திருநெல்வேலி மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி மற்றும் மேலகுளம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 6.1 கிலோ கஞ்சா, ஒரு கார்…
Tirunelveli power outage : திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூர், நகர்ப்புறம் மற்றும் கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் வரும் ஆகஸ்ட் 1 (சனிக்கிழமை) அன்று…
Robert Bruce: கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில், தொகுதி வரையறை மசோதா கொண்டுவரப்பட்டது என திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ்…
Nanguneri Petrol Bomb Attack: நாங்குநேரி பெட்ரோல் குண்டு வீச்சில் திருநெல்வேலியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்