Share Market Today: இன்றைய பங்கு வர்த்தகத்தில், சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்தது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த போதிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருகின்றனர்.
Share Market Today: இன்றைய பங்கு வர்த்தகத்தில், சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்தது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த போதிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருகின்றனர்.
Published on: February 10, 2025 at 11:31 am
இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற போதிலும், திங்கள்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. குறிப்பாக, விற்பனை அதிகரித்து காணப்பட்டதால் முக்கிய குறியீடுகள் சரிவுடன் தொடங்கி சரிவுடனே வர்த்தகம் ஆகின.
இந்நிலையில், ஆரம்ப வர்த்தகத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் இழந்து காணப்பட்டது. அதே நேரத்தில், என்.எஸ்.இ நிஃப்டி 200 புள்ளிகளுக்கு அருகில் சரிந்தது. முந்தைய அமர்வில் 77,860.19 இல் முடிவடைந்த சென்செக்ஸ் அன்றைய குறைந்தபட்சமாக 77,189.04 ஆக சரிந்தது. இன்று, காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 579.15 புள்ளிகள் குறைந்து 77,281.04 ஆகவும், நிஃப்டி 50 177.90 புள்ளிகள் குறைந்து 23,382.05 ஆகவும் காணப்பட்டது.
இந்த நிலையில், சந்தை வல்லுநர்கள் பங்கு விற்பனைக்கு பல காரணிகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெல்த்மில்ஸ் செக்யூரிட்டீஸின் ஈக்விட்டி ஸ்ட்ராட்டஜி இயக்குனர் கிராந்தி பதினி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர், இது சந்தையில் அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று கூறினார்.
இதையும் படிங்க : பி.எம் கிஷான் அடுத்த தவணை ரூ.2 ஆயிரம் எப்போது? மத்திய அமைச்சர் தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com