Sahabuddin Rashvi vs Vijay: நடிகர் விஜய்யை இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுத்தீன் ராஷ்வி தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sahabuddin Rashvi vs Vijay: நடிகர் விஜய்யை இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுத்தீன் ராஷ்வி தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: April 16, 2025 at 10:47 pm
சென்னை ஏப்ரல் 16 2025; நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யை இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஷ்வி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஷ்வியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராஷ்வி மேலும் கூறுகையில், “தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயுடன் இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைத்து கவுரவிக்க வேண்டாம்’ எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நடிகர் விஜய், ” இஸ்லாமியர்களை திரைப்படங்களில் தீவிரவாதிகள் போல் சித்தரித்தவர்” எனவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அரசியல் களத்தில் இஸ்லாமியர்கள் மீதான விஜய் நிலைப்பாடு
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய், கடந்த காலங்களைப் போல் இஸ்லாமியர்கள் மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ரம்ஜான் நோன்பு திறக்கப்பட்டது.
இந்த நோன்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பாரம்பரிய இஸ்லாமியர் போல் தலையில் குல்லா அணிந்து கலந்து கொண்டார். மேலும் இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சியும் அருந்தினார்.
இந்த நிலையில் வக்பு திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது, “இந்த சட்டம் இஸ்லாமியர்களை துன்புறுத்துகிறது; இது இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது” என ஆனந்த் தனது கருத்தை பதிவிட்டார்.
மேலும், வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடிகர் விஜய் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ், திமுக மற்றும் சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இது போன்ற வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று ( ஏப்ரல் 16 2025) தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு; நடிகர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com