குடும்பம் குடும்பமாக பர்சேஸ்; கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Kanyakumari | கன்னியாகுமரியில் இன்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Published on: November 1, 2024 at 10:01 pm

Updated on: November 1, 2024 at 10:02 pm

Kanyakumari | தமிழ்நாட்டின் தென்எல்லையான கன்னியாகுமரி நேசமணி தலைமையில் நடந்த போராட்டத்தால் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டது. முன்னதாக, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மொழிவாரி மாகாண அந்தஸ்தை பெற்று இருந்தன. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடும் மொழிவாரி மாகாணமாக பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டைப் போல் ஆந்திராவுக்கும் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மொழிவாரி மாகாணமாக தமிழ்நாடு உருவான நாள் என்பதாலும், கன்னியாகுமரி தமிழ்நாடோடு இணைந்த நாள் என்பதாலும் இன்று கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், தீபாவளிக்கு அடுத்த தினம் விடுமுறை என்பதாலும் பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. அதிகாலை விவேகானந்தர் மற்றும் திருவள்ளூர் பாறைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்தனர்.

அதேபோல் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில், காட்சிக் கோபுரம், அருங்காட்சியகம், பூங்கா, காந்தி, காமராஜர் மண்டபங்கள் என பார்க்கும் இடமெல்லாம் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையில் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர். பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். கடற்கரையோரம் உள்ள கடைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் (நவ.3, 2024) விடுமுறை என்பதால் அடுத்த இரு தினங்களும் இதேபோல் கூட்டம் கூட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் காலநிலை இதமாக இருந்தால் மக்கள் கூட்டம் அதிகாலை முதலே வரக்கூடும் என்றனர். தொடர்ந்து, கடந்த வாரங்களில் அவ்வப்போது மழை பெய்தது என்றும் அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் தனியார் மயமாகும் கால்பந்து மைதானம்; ஒரு மணி நேரம் விளையாட கட்டணம் எவ்வளவு தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com