அமர்நாத் பனிலிங்க தரிசனம்.. யாத்திரை இன்று தொடக்கம்!

Annual Amarnath Yatra Begins : ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீ அமர்நாத் யாத்திரை, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு வழித்தடங்களில் இருந்தும் தொடங்குகிறது.

Published on: July 3, 2026 at 10:07 pm

ஸ்ரீநகர், ஜூலை 3, 2026: அமர்நாத் யாத்திரை இன்று காலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்த யாத்திரை, நுன்வான்-பஹல்காம் மற்றும் பால்தால் ஆகிய இரு வழித்தடங்களிலும் சுமுகமாக நடைபெற்று வருகிறது.
விடியற்காலையில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருடாந்திர ஸ்ரீ அமர்நாத் யாத்திரை இன்று காலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

நுன்வான்-பஹல்காம் மற்றும் பால்தால் ஆகிய இரு வழித்தடங்களிலும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் “பாம் பாம் போலே” மற்றும் “ஹர் ஹர் மஹாதேவ்” என்ற கோஷங்களை எழுப்பியபடி மலையேற்றம் செய்து கொண்டிருக்கின்றனர். இயற்கையாக உருவான பனி சிவலிங்கத்தை தரிசிக்க புனித குகைக் கோயிலுக்குச் செல்லும் இந்த யாத்திரை, உற்சாகமான சூழலில் நடைபெற்று வருகிறது.

மலைப்பாங்கான நிலப்பரப்பையும் குறுகிய கணவாய்களையும் கடந்து, யாத்ரீகர்கள் சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறும் நோக்கில் பயணிக்கின்றனர். யாத்ரீகர்களின் வசதி, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, இரு வழித்தடங்களிலும் தண்ணீர், உணவுப் பொருட்கள் மற்றும் ஓய்விடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : பாவங்கள் நீங்கி செல்வம் பெருகும்.. ஆனி திருமஞ்சனத்தின் மகிமை என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com