Madurai | தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வியெழுந்துள்ளது.
Madurai | தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வியெழுந்துள்ளது.
Published on: October 25, 2024 at 5:42 pm
Madurai | பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க உத்தரவிட கோரிய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (அக்.25, 2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘எந்த வாகனத்தை அனுமதிக்க வேண்டும், எந்த வாகனத்தை அனுமதிக்க கூடாது என்பது மாவட்ட நிர்வாகத்திற்கு தான் தெரியும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, “பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு விசாரணை குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்திய விடுதலை வீரரும் அரசியல்வாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும், பசும்பொன் தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சென்னை; தனியார் பள்ளியில் வாயு கசிவு: 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com