இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் ; 70 ஹிஸ்புல்லா போராளிகள் பலி

Gaza | தெற்கு லெபனானில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 0 ஹிஸ்புல்லா போராளிகள் அழிக்கப்பட்டுள்ளனர்.

Published on: October 23, 2024 at 2:18 pm

Gaza | தெற்கு லெபனானில், இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தரை மற்றும் வான்வழி தாக்குதல்களில் தோராயமாக 70 ஹிஸ்புல்லா போராளிகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

மேலும், ராக்கெட்கள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள் உள்ளிட்ட ஹிஸ்புல்லா ஆயுத களஞ்சியங்களை இஸ்ரேலிய வீரர்கள் அழித்துள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புல்லா, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பிற்கு இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளதோடு இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால், லெபனானில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தரை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் ; 33 பாலஸ்தீனியர்கள் பலி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com