Mythology | சாகும் தருவாயில் துரியோதனன் மனதில் இருந்த 3 கேள்விகளுக்கு பதிலளித்த கிருஷ்ணர்.
Mythology | சாகும் தருவாயில் துரியோதனன் மனதில் இருந்த 3 கேள்விகளுக்கு பதிலளித்த கிருஷ்ணர்.
Published on: October 19, 2024 at 10:29 am
Updated on: October 19, 2024 at 10:31 am
Mythology | மகாபாரத போரில் துரியோதனின் தொடையை பீமன் அடித்து உடைத்த பின்னரும் துரியோதனனின் உயிர் பிரியவே பிரியாது. துரியோதனின் உயிர் பிரியாமல் இருந்ததற்கு காரணம் அவர் மனதில் மூன்று கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அந்த மூன்று கேள்விகளை கிருஷ்ணர் தெரிந்து கொள்வார்.
அந்த கேள்விகள் என்னவென்றால், அஸ்தினாபுரத்தை சுற்றி ஒரு பெரிய கோட்டையை கட்டியிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? துரோணாச்சாரியாரின் இறப்பிற்கு பின்னர் அஸ்வத்தாமனை சேனாதிபதியாக ஆக்கி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? விதுரரை மகாபாரத போரில் கலந்து கொண்டிருக்க செய்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?
இதற்கு, கிருஷ்ணரின் பதில் என்னவென்றால் நீ அஸ்தினாபுரத்தை சுற்றி பெரிய கோட்டையை கட்டியிருந்தால் நான் நகுலனை அனுப்பி கோட்டையை உடைத்து இருப்பேன். ஏனென்றால் நகுலன் அளவிற்கு யாராலும் குதிரையை ஓட்ட முடியாது. ஒருவேளை அஸ்வத்தாமன் சேனாதிபதியாக இருந்திருந்தால் நான் தர்மனை கோபப்பட செய்திருப்பேன்.
ஏனென்றால் தர்மனின் கோபத்திற்கு முன்னால் எப்பேர்பட்ட மாவீரனாக இருந்தாலும் எரிந்து சாம்பலாகி விடுவான். ஒருவேளை விதுரர் போர் செய்திருந்தால் நானே ஆயுதம் ஏந்தி போர் செய்திருப்பேன். என்று கிருஷ்ணர் சொல்வார். அதன் பின்னரே துரியோதனனின் மனதில் இருந்த கேள்விகளுக்கு விடை தெரிந்து துரியோதனனின் உயிர் பிரிந்தது.
இதையும் படிங்க : மயானத்தில் கடும் தவம்; சுழட்டி அடித்த பேய்கள்: நேரில் காட்சிக் கொடுத்த முருகன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com