Chennai bike race | சென்னை இசிஆரில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Chennai bike race | சென்னை இசிஆரில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Published on: October 14, 2024 at 11:57 am
Chennai bike race | சென்னை ஈசிஆரில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் இசிஆரில் வேகமாக பிரேயர் செல்வது போல் செல்லும் இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை எச்சரித்து விடுவித்தனர். எனினும் பைக் ரேஸ் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் மற்ற வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
சில நேரங்களில் எதிர்பாராத விதமாக விபத்துக்களும் ஏற்பட்டன. இதனை தவிர்க்கும் வண்ணம் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை மடக்கிப் பிடிக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை ஈ சிஆரில் பைக் ரேஸ்சில் ஈடுபட்டதாக 15 பேரின் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை விலை உயர்ந்த வாகனங்கள் ஆகும்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ” சம்பந்தப்பட்ட நபர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com