100 நாள்களில் ரூ.100 கோடி என வலை; தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் அதிகரிப்பு: மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss | தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து காணப்படுவதாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Published on: October 4, 2024 at 6:25 pm

Dr Ramadoss | பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “100 நாட்களில் 100 கோடி பரிசு என வலைவீசி மக்களை இழுக்கும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து வருகிறது.

தீபஒளி திருநாள், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் ஆகியவற்றையொட்டி அக்டோபர் 5-ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை 100 நாட்களுக்கு ரூ. 100 கோடி பரிசு வெல்லலாம் என்று ஆசை காட்டி ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்து வருகிறது. இதன் விளைவு என்னவாக இருக்குமோ? என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருந்து ஓர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது என்றால் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் பணம் எத்தனை ஆயிரம் கோடி சூதாட்டத்தின் மூலம் சுருட்டப்படும்; அதனால் தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வரும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது. ஆனால், இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும் கூட கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தமிழக அரசின் மேல்முறையீடு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இதை சுட்டிக்காட்டி ஆன்லைன் சூதாட்டத் தடை வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவோ, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவோ எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; லட்சக்கணக்கான குடும்பங்கள் சொத்துகளை இழந்து தவிக்கின்றன. இதே நிலை தொடருவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறதா?

இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

காஞ்சிபுரத்தில் சளி தொல்லை பாதிப்பு.. மருத்துவர் ராமதாஸ் அறிக்கை! Dr Ramadoss

காஞ்சிபுரத்தில் சளி தொல்லை பாதிப்பு.. மருத்துவர் ராமதாஸ் அறிக்கை!

Dr Ramadoss: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சளி பாதிப்பு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது; மக்கள் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர்…

மாணவர்களின் நலன் கருதி.. கோரிக்கை வைத்த மருத்துவர் ராமதாஸ்! Dr Ramadoss says Tamil Nadu person was attacked in Bengaluru

மாணவர்களின் நலன் கருதி.. கோரிக்கை வைத்த மருத்துவர் ராமதாஸ்!

Dr Ramadoss: “மாணவர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்” என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

பாமக அமைப்பது, ‘வெற்றி கூட்டணி’.. மருத்துவர் ராமதாஸ்! Dr. Ramadoss

பாமக அமைப்பது, ‘வெற்றி கூட்டணி’.. மருத்துவர் ராமதாஸ்!

Dr. Ramadoss: 2026 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பது வெற்றி கூட்டணியாக திகழும் என அக்கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

அன்புமணி மீது நடவடிக்கை.. தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்! Ramadoss writes to Election Commission

அன்புமணி மீது நடவடிக்கை.. தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்!

Dr Ramadoss: அன்புமணி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்….

என் மார்பினில் ஈட்டியால் குத்துகிறார் அன்புமணி.. ராமதாஸ் Dr Ramadoss

என் மார்பினில் ஈட்டியால் குத்துகிறார் அன்புமணி.. ராமதாஸ்

Dr Ramadoss: “என் மார்பினில் ஈட்டியால் குத்துகிறார் அன்புமணி” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com