Allahabad High Court |அலகாபாத் உயர்நீதிமன்றம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் குரூப் சி மற்றும் டி பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 3,306 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவுகளின் அடிப்படையில் காலியிடங்களின் எண்ணிக்கை மாறுபடும்.
மேலும், உயர்நீதிமன்றத்தால் பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் உ.பி.யின் பிற பிரிவுகளின் உறுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு தேதிகளில் ஆஃப்லைன் எழுத்துத் தேர்வை நடத்தும். மேலும், பதவியைப் பொறுத்து இந்தி மற்றும் ஆங்கிலம் டைபிங் தேர்வு, ஸ்டெனோகிராபி சோதனைகள் மற்றும் ஓட்டுநர் சோதனைகள் போன்றவை நடத்தப்படும்.
தேர்வு தேதி, நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் ஹால் டிக்கெட் மூலம் அறிவிக்கப்படும். பதவிகளைப் பொறுத்து ஊதியம் மாறுபடும். இத்தேர்வுக்கு அக்டோபர் 4 முதல் அக்டோபர் 24 வரை அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளமான allahabadhighcourt.in ல் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க
Indian Overseas Bank jobs : இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன….
BOI Recruitment 2026: பேங்க் ஆஃப் இந்தியா, உதவி மேலாளர் நிலை கிரெடிட் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது….
KVB: கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன….
Indian Bank: இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28, 2026 கடைசி நாளாகும்….
SBI Clerk Mains Result 2025: எஸ்.பி.ஐ கிளார்க் மெயின் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்