Babar Azam | பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது தனிப்பட்ட ஆட்டத்தை மேம்படுத்தும் விதமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாபர் அசாம் இதற்கு முன்பு பாகிஸ்தானின் அனைத்து வடிவ கேப்டனாக இருந்தார். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதையடுத்து அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி அவருக்குப் பிறகு டி20 ஐ கேப்டனாக ஆனார். ஆனால் மீண்டும் கேப்டன்சி பாபர் வசம் சென்றது.
அவர் மார்ச் 2024 இல் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டார்.இருப்பினும், 2024 டி 20 உலகக் கோப்பையில் குழு நிலையிலிருந்து வெளியேறியதால், பாகிஸ்தான் கேப்டனாக அவரது இரண்டாவது பதவிக்காலம் வெற்றிபெறவில்லை.
அப்போது அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் தோற்றது. இந்த நிலையில் வங்கதேச அணியிடம் பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் பாபர் அசாம் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், “பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். நான் இனி எனது ஆட்டங்களில் கவனம் செலுத்த உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கேப்டன் என்பது ஒரு பலனளிக்கும் அனுபவமாக உள்ளது, ஆனால் இது ஒரு குறிப்பிடத்தக்க பணிச்சுமையை சேர்க்கிறது. நான் எனது செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன், எனது பேட்டிங்கை ரசிக்க விரும்புகிறேன், மேலும் எனது குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட விரும்புகிறேன், இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க
Vaibhav Sooryavanshi: வைபவ் ரெட்-பால் போட்டிகளில் கவனம் அவசியம் என பயிற்சியாளர் மனீஷ் ஓஜா தெரிவித்துள்ளார்….
Virat Kohli: இந்தியா இலங்கை கிரிக்கெட் போட்டியில் நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்த சாதனை தற்போது நினைவு கூறப்படுகிறது….
Sourav Ganguly: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கலப்பு மாற்றுத்திறனாளிகள் தொடரின் இறுதி டி20 போட்டியில், இந்திய அணி இங்கிலாந்தை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப்…
AB de Villiers: சச்சின் தெண்டுல்கரை விட சிறந்த வீரர் விராத் கோலி என ஏபி டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்….
Rishabh Pant: டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்….
.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்