Tasmac Bill | டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறைக்கான சோதனை முயற்சியாக ராணிப்பேட்டையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமக இது 7 டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தக் கடைகள், ஆற்காடு, திமிரி, வானம்பாடி, ரத்தினகிரி, ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி ஆகும். இந்த கடைகளில் மது வாங்க வந்தவர்களுக்கு பில்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “இது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் விலை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்ற சர்ச்சை முடிவுக்கு வரும். மேலும், மது பிரியர்களுக்கு எந்த ரகம் பிடித்துள்ளது; எது அதிகம் விற்பனையாகிறது என்ற தகவலும் கிடைக்கும்” என்றார்.
கடந்த காலங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை அமைச்சர் வரை சென்றது. தொடர்ந்து, இது தொடர்பாக அமைச்சர் விளக்கம் அளித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க
Sudden Rain Across Chennai : கடும் கோடை வெயிலால் அவதிப்பட்டிருந்தநிலையில், திடீர் கனமழை குளிர்ச்சி அளித்து சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Lord Murugas Kavadi song : சுவாமி பத்மேந்திரா இயற்றி புஷ்பவனம் குப்புசாமி பாடிய என்னப்பா! பழனியப்பா! முருகன் காவடிப் பாடல் வெளியிடும் விழா சென்னையில் நடந்தது….
Political commentator Ponraj: தமிழக பெண்கள் குறித்து இழிவாக பேசிய நிலையில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மன்னிப்பு கூறியுள்ளார்….
Guindy Children’s Park: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா பறவைக் காய்ச்சல் காரணமாக காலவரையற்ற வகையில் மூடப்பட்டுள்ளது….
Tamil Nadu Government: சத்தியமங்கலத்தில் செயல்பட்ட 42 சட்டவிரோத ரிசார்ட்கள் சீல் வைக்கப்பட்டன என தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்