Coimbatore Pappammal death | கோவை பாப்பம்மாள் மரணத்துக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
110 வயதான பாப்பம்மாள் பாட்டி கடைசி வரை இயற்கை விவசாயத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இளம் தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடங்களை நடத்தியுள்ளார்.
இவரது சேவைகளை மதித்து 2021-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே காலில் விழுந்து வணங்கியது அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த அங்கீகாரமாகும்.
பாப்பம்மாள் பாட்டியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க
G K Mani: பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கு சொந்தமானது அல்ல என அக்கட்சியின் ராமதாஸ் தரப்பு கௌரவத் தலைவர் ஜி.கே மணி கூறியுள்ளார்….
Dr Ramadoss: “என் மார்பினில் ஈட்டியால் குத்துகிறார் அன்புமணி” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்….
Anbumani Ramadoss: உரிய ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள்…
Anbumani Ramadoss: ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என கூறியுள்ள அன்புமணி ராமதாஸ் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்….
G.K. Mani: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை அவமானப்படுத்துவதற்கு சமம் என ஆதங்கப்பட்டுள்ளார் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி கே மணி….
Anbumani Ramadoss: சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை விவகாரத்தில், திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்