Palm workers protest in Valliyur | “தமிழ்நாட்டில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க வேண்டும்; கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்பதை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும். பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், பனைத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை மாநிலத் தலைவர் டெய்சி தங்கையா உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க
No Fee at Old Courtallam : பழைய குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது; இங்கு குளிக்க கட்டணம் இல்லை….
Eight Held in Masked Assault : தென்காசி- திருநெல்வேலியில் முகமூடி அணிந்து தாக்குதல் நடத்திய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
Tirunelveli: நெல்லையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்….
Tirunelveli Hostel Scandal: திருநெல்வேலியில் பெண்கள் விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது….
AIADMK MLA Isakki Subbiah : அ.தி.மு.க. எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன….
Nanguneri Perumbathu Violence : நாங்குநேரி பெரும்பத்து வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சரத் குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்