சென்னை, ஜூலை 26 2026: மாதம் ₹25,000 அடிப்படை சம்பளம்பெறும் ஒரு ஊழியர், தொடர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றி ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் பங்களித்தால், ஓய்வுபெறும் நேரத்தில் சுமார் ₹1.12 கோடி வரையிலான பிஎப் தொகையை உருவாக்க முடியும் என கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இந்த மதிப்பீடு 8.25% ஆண்டு வட்டி, ஆண்டுதோறும் 5% சம்பள உயர்வு மற்றும் இபிஎஃப் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கீட்டின்படி, 30 ஆண்டுகளில் ஊழியர் மற்றும் நிறுவனத்தின் இபிஎஃப் பங்களிப்பு சேர்த்து சுமார் ₹33.26 லட்சம் செலுத்தப்பட்டாலும், கூட்டு வட்டி மூலம் கிடைக்கும் வட்டி மட்டும் சுமார் ₹78.49 லட்சம் ஆகும். இதன் மூலம் மொத்த பிஎப் சேமிப்பு ₹1.12 கோடியை எட்டுகிறது. நீண்டகால முதலீட்டில் கூட்டு வட்டியின் தாக்கமே இந்த பெரிய தொகைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இபிஎஃப் கணக்கை எளிதாக நிர்வகிக்க யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) மற்றும் ஆதார் இணைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிஎப் இருப்பு, பாஸ்புக் பதிவிறக்கம், கணக்கு மாற்றம், ஆன்லைன் கோரிக்கைகள் உள்ளிட்ட சேவைகளை எளிதாகப் பெற முடியும். மேலும், நாமினி விவரங்களை பதிவு செய்வதும் முக்கியமானதாகும்.
அதே நேரத்தில், பணியில் இருந்து விலகிய பிறகு, நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல் தனியாக இபிஎஃப்-க்கு தொடர்ந்து பணம் செலுத்த முடியாது என்றும் விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நடைமுறையில் உள்ள விதிகளின்படி சில சூழல்களில் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) மூலம் 12%க்கும் அதிகமாக பங்களிக்க ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : இ.பி.எஃப் கணக்கில் எப்போது வட்டி நிற்கும்? ஓய்வூதிய சேமிப்பை எப்படி அதிகரிக்கலாம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்