ஹோர்முஸ் நீரிணையில் ஏவுகணை தாக்குதல்… இந்திய கடற்படை ஊழியர் உயிரிழப்பு!

Hormuz Attack: ஹோர்முஸ் நீரிணையில் UAE-க்கு சொந்தமான இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது நடந்ததாகக் கூறப்படும் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்திய கடற்படை ஊழியர் உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

Published on: July 14, 2026 at 1:56 pm

துபாய், ஜூலை 14 2026: ஈரான் – அமெரிக்கா இடையேயான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு இந்திய கடற்படை (crew) ஊழியர் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பஹியா’ (Al Bahiyah) என்ற இரண்டு தேசிய டேங்கர் கப்பல்கள், ஓமன் கடற்பரப்புக்குள் உள்ள ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு கடல் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு ஈரானிய குரூஸ் ஏவுகணைகள் தாக்கியதாக UAE தெரிவித்துள்ளது. தாக்குதலால் கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை சர்வதேச சட்டத்தை மீறும் மிகக் கடுமையான நடவடிக்கை என்று ஐக்கிய அரபு அமீரகம் கண்டித்துள்ளது. நாட்டின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் வர்த்தகப் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை உள்ளதாகவும் UAE அரசு தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக இருப்பதால், இந்த தாக்குதல் உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்திய அதிகாரிகளும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கப்பலில் இருந்த மற்ற இந்தியர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க குவைத், ஜோர்டான், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்.. வளைகுடா நாடுகளில் பதற்றம்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் இந்தியா… 2028-29 உறுப்பினர் பதவிக்கான பிரசாரத்தை தொடங்கிய ஜெய்சங்கர்! UNSC 2028

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் இந்தியா… 2028-29 உறுப்பினர் பதவிக்கான பிரசாரத்தை தொடங்கிய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com