நேற்று கைது, இன்று என்கவுன்ட்டர்; யார் இந்த சீசிங் ராஜா

Seizing Raja Encounter in Chennai | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்புடைய கூறப்படும் ரவுடி சீசிங் ராஜா இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

Published on: September 23, 2024 at 11:18 am

Seizing Raja Encounter in Chennai | பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் கட்சி நிர்வாகிகள் உள்பட இதுவரை 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் நண்பரான சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக வழக்கு ஒன்றில் இவர் தேடப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தன. இந்த வழக்கில் சீசிங் ராஜா கைது செய்யப்பட்டது முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நீலாங்கரை பகுதியில் வைத்து சீசிங் ராஜாவை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சீசிங் ராஜா தப்பி ஓட முயற்சித்ததாக கூறப்படுகிறது. மேலும் சீசிங் ராஜா துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் வாகனத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் தற்பாதுகாப்புக்காக சுட்டதில் சீசிங் ராஜா உயிரிழந்தார். ஆழ்ஸட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் ஏற்கனவே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், 2வதாக என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் சீசிங் ராஜா.

கதறி அழுத மகள்

சென்னையில் இன்று அதிகாலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா உடலை பார்த்து அவரது மகள் கதறி அழுதார். ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடலை பார்த்தும் கதறி அழுத அவரது மகள், “”செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டீர்களே” என்றார். இந்த நிலையில், ராயப்பேட்டை பிணவறை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நாகர்கோவிலில் 2 கொலை உள்பட 8 வழக்குகள்; கோவையில் சுடப்பட்ட ரவுடி ஆல்வின் பின்னணி என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com