மோடியை சந்திக்கும் ட்ரம்ப்.. ஜி7 மாநாடு.. பரபரப்பு தகவல்கள்!

G7 France summit : பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: June 14, 2026 at 11:18 am

பாரிஸ், ஜூன் 14, 2026: பிரான்சில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியை டிரம்ப் சந்திப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி ஒரு வார கால பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு புறப்பட்டுள்ளார், இந்தப் பயணத்தின் போது அவர் ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்சில் நடைபெறவிருக்கும் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்திய தரப்பு இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மோடி தற்போது பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு ஒரு வார கால பயணமாக புறப்பட்டுள்ளார். ஜூன் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் பிரான்சின் எவியான் நகரில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.

இந்த உச்சிமாநாட்டின் போது டிரம்ப், மத்திய கிழக்கு தலைவர்களையும், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் சந்திக்க உள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு “எப்போதையும் விட நெருக்கமாக” இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவது குறித்தும் டிரம்ப் விவாதிக்க உள்ளார்.

பிரான்ஸ் பயணம் குறித்து பிரதமர் மோடி, “ஜி7 உச்சிமாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பு, அதன் கூட்டாளிகள் நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய மதிப்பையும் பிரதிபலிக்கிறது” என்று கூறினார். தொடர்ந்து எட்டாவது முறையாக இந்தியா ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருப்பது, உலகளாவிய தெற்கின் அபிலாஷைகளுக்கான குரலாக இந்தியா செயல்படுவதை காட்டுகிறது என அவர் வலியுறுத்தினார்.

மோடி, “பிரான்ஸ் இந்தியாவின் மூலோபாயப் பார்வையில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. அதிபர் மக்ரோன் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, ​​நாங்கள் உறவை ஒரு சிறப்பு உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தினோம். ஸ்லோவாக்கியா பயணம் இருதரப்பு உறவுகளில் வளர்ந்து வரும் உத்வேகத்தை வலுப்படுத்தும்” எனக் குறிப்பிட்டார்.

உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பாரிஸுக்கு அருகிலுள்ள வெர்சாய் அரண்மனையில் இரவு விருந்தில் சந்திக்க உள்ளனர். ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான திட்டங்கள் குறித்து அமெரிக்க நட்பு நாடுகளுடன் டிரம்ப் ஆலோசிக்க உள்ளார். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இந்த நடவடிக்கைகளில் உதவ ஆர்வம் காட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : இந்தியாவின் இறையாண்மையை யாரும் அசைக்க முடியாது.. ரஷ்ய அதிபர் புதின்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com