‘தமிழ்நாட்டின் ஒரு பகுதி மேகதாது’.. வியனரசு அதிரடி!

Mekedatu resolution : “மேகதாது தமிழ்நாட்டின் பகுதி என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என வியனரசு வலியுறுத்தியுள்ளார்.

Published on: June 13, 2026 at 6:52 pm

சென்னை, ஜூன் 13, 2026: சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மேகதாது அணைத் திட்டத்தை முறியடிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். காவிரி நீர் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், 5 கோடி தமிழ் மக்களின் குடிநீர் மற்றும் 24 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாக காவிரி ஆற்றின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து ஒப்புதலை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருப்பதையும், தவெக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் வியனரசு தெரிவித்தார்.

மேகதாது பகுதி தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியாக இருப்பதை வலியுறுத்திய அவர், காவிரி ஆற்றின் இடது கரை கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லைக்குட்பட்ட பகுதியாகும் என சுட்டிக்காட்டினார். காளி கோயில் தமிழ்நாட்டு மக்களின் வழிபாட்டுத் தலமாக இருப்பதால், அந்த பகுதி தமிழ்நாட்டின் பிரிக்கப்படாத காட்டுவனப் பகுதியாக கருதப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

கர்நாடக அரசு சட்டவிரோதமாக காவிரியின் நீரை தடுத்து விடும் முயற்சிகளை தடுக்க, எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தில் மேகதாது பகுதியை தமிழ்நாட்டின் பகுதியாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வியனரசு வலியுறுத்தினார். இதன் மூலம் தமிழ்நாட்டின் நீர் உரிமை பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மாம்பழ கூழ் தொழிற்சாலை.. எங்கு அமைகிறது? அமைச்சர் பேட்டி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com