Pakistan helicopter crash : பாகிஸ்தான் ஆக்கிமிப்பு பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
Pakistan helicopter crash : பாகிஸ்தான் ஆக்கிமிப்பு பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

Published on: June 11, 2026 at 11:07 am
இஸ்லாமாபாத், ஜூன் 11, 2026: பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் (PoK) பாகிஸ்தான் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த அனைத்து பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படும் நேரத்தில் ஏற்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்தது எப்போது?
ஜூன் 10, 2026 அன்று, பாகிஸ்தான் இராணுவத்தின் Mi-17 ஹெலிகாப்டர் முசாஃபராபாத் அருகே விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டர் புறப்படும் நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் தரைமட்டத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், விபத்து நடந்த உடனே மீட்பு மற்றும் மீளாய்வு குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்றன. விபத்துக்கான சரியான தொழில்நுட்பக் காரணத்தை கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்புத் துறைத் தலைவர் அசிம் முனீர் மற்றும் இராணுவத்தின் அனைத்து நிலைகளும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, செப்டம்பர் 2025 ஆம் தேதியன்று, கில்கித்-பல்டிஸ்தான் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு.. 12 பேர் பலி.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com