ரஷ்யா உள்பட மத்திய வங்கிகள் தங்கத்தை விற்பனை செய்கிறதா? இந்தியாவின் நிலை என்ன?

Dollar Strength vs Gold Demand: மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கத் தொடங்கவில்லை. அவர்கள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகின்றனர். இதற்கிடையில், ஈரான் போர் நீடிப்பதால் எண்ணெய் விலை உயர்ந்து, அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது.

Published on: April 4, 2026 at 3:08 pm

மும்பை, ஏப்.4, 2026: ஈரான்- அமெரிக்க போரின் காலம் மற்றும் திசை இன்னும் உறுதியற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், டாலரின் இயக்கத்தை கவனிப்பது முக்கியம், ஏனெனில் அது தங்கத்தின் அடுத்தடுத்த மாற்றங்களை காட்டக்கூடும். இதற்கிடையில், மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கத் தொடங்கவில்லை. அவர்கள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகின்றனர். ஈரான் போர் நீடிப்பதால் எண்ணெய் விலை உயர்ந்து, அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது.

தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு சொத்து என்பதால், பெரும்பாலும் நெருக்கடியான சூழ்நிலைகளில் பணம் திரட்டும் கடைசி வழியாக பயன்படுத்தப்படுகிறது. உலகம் பதட்டத்தில் இருக்கும் இந்நேரத்தில், மத்திய கிழக்கு பிரதேசத்தில் பதற்றம் குறையாததால், சில மத்திய வங்கிகள் இந்த அழுத்தத்தை உணர்கின்றன. இதற்கிடையில், தங்கள் தங்கக் கையிருப்பில் இருந்து ஏற்கனவே தங்கத்தை சில வங்கிகள் பயன்படுத்தியுள்ளன. உலக தங்கக் கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, பிப்ரவரியில் துருக்கி 8 டன்னும், ரஷ்யா 6 டன்னும் தங்கத்தை விற்றுள்ளது.

இதில், துருக்கியின் நிலை எண்கள் காட்டுவதை விட சிக்கலானது. அந்த தங்கக் கையிருப்பு குறைவு, பெரும்பாலும் இரான் போர் தொடங்குவதற்கு முன் நடந்தது. அதாவது, துருக்கியின் சூழலில், குறைவு பெரும்பாலும் நிதியமைச்சகத்தின் கையிருப்பில் ஏற்பட்டது, மத்திய வங்கியின் கையிருப்பில் அல்ல.

இதற்கிடையில், மார்ச் மாதத்தில், துருக்கி மத்திய வங்கி மிகவும் செயல்பாட்டுடன் இருந்தது. சுமார் 50 டன் தங்கக் கையிருப்பை வெளிநாட்டு பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) தங்கக் கையிருப்பில் 2025-இல் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 2024-ல் இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 72.6 டன் தங்கம் வாங்கியது. இந்நிலையில், 2025ஆம் ஆண்டில், தங்கம் வாங்குதல் கடுமையாகக் குறைந்து, வெறும் 4.02 டன் மட்டுமே வாங்கப்பட்டது. இந்நிலையில், 2025 இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு 880.3 டன் என்ற சாதனை அளவை எட்டியது.

இதற்கிடையில், நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு, ஜனவரியில் இந்திய ரிசர்வ் வங்கி, 0.13 டன் என்ற சிறிய அளவில் தங்கம் வாங்கியது. பிப்ரவரியில் எந்த வாங்குதலும் செய்யவில்லை. அதாவது, கடந்த ஆண்டு மொத்தம் 1.3 டன் தங்கம் மட்டுமே வாங்கப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: இந்த வாரம் ‘Buy’ மதிப்பிடப்பட்ட Top 10 பங்குகள்.. நோட் பண்ணுங்க ப்ளீஷ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com