ஒர் நூற்றாண்டு போராட்டமும் தியாகமும்.. தோழர் ஆர். நல்லக்கண்ணு மறைந்தார்!

R Nallakannu passes away: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லக்கண்ணு தனது 101ஆவது வயதில் மறைந்தார்.

Published on: February 25, 2026 at 5:06 pm

சென்னை, பிப்.25, 2026: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லக்கண்ணு தனது 101ஆவது வயதில் இன்று (புதன்கிழமை) மறைந்தார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தோழர். நல்லக்கண்ணுவை பொருத்தமட்டில், அரசியல் என்பது ஒருபோதும் தனிப்பட்ட ஆசை அல்லது பதவி விருப்பம் அல்ல. அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான அநீதிகளை எதிர்த்து, அவர்களை ஒருங்கிணைத்து, இயக்கி, போராடச் செய்வதற்கான கருவியாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, நீண்டகால வயது சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமானார். அவருக்கு 101 வயது.
இது குறித்து, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 1 அன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார் என்றும் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் அவர் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், அவரது நிலை மோசமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மருத்துவ அறிக்கையில், “மிகுந்த துயரத்துடன் தெரிவிக்கிறோம், திரு. நல்லக்கண்ணு பிப்ரவரி 25 அன்று பிற்பகல் 1.55 மணிக்கு மறைந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் என். சங்கரையா மறைந்ததைத் தொடர்ந்து, நல்லக்கண்ணு தமிழ்நாட்டின் கடைசி நூற்றாண்டு வாழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தார்.

மக்களால் அன்புடன் “தோழர் ஆர்.என்.கே” என்று அழைக்கப்பட்ட அவர், எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் வெளிச்சத்தில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின் உருவமாகத் திகழ்ந்தார்.
1925 டிசம்பர் 26 அன்று தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெரும்பாத்து கிராமத்தில் பிறந்த நல்லக்கண்ணு, வறுமையையும் சுரண்டலையும் நேரடியாகக் கண்டார்.

மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட அவர், இந்தியா காலனித்துவ ஆட்சியில் இருந்த 1946-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மக்களின் போர்படை தளபதி.. நல்லக்கண்ணு மறைவுக்கு பி.ஆர் பாண்டியன் இரங்கல்!

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி! Defection Row

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின் பதறவைக்கும் நிமிடங்கள்! Vietnam Boat Tragedy

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின்

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய் Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com