காஞ்சிபுரத்தில் சளி தொல்லை பாதிப்பு.. மருத்துவர் ராமதாஸ் அறிக்கை!

Dr Ramadoss: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சளி பாதிப்பு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது; மக்கள் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: February 14, 2026 at 9:22 pm

சென்னை பிப்ரவரி 14, 2026; காஞ்சிபுரம் மாவட்டத்தில் சளி பாதிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பல காகங்கள் திடீரென உயிரிழந்தது, காகங்களின் மாதிரிகளை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனை மையத்தில் சோதனை செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் மனிதர்களிடத்தில் உறுதி செய்யப்படவில்லையென்றாலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது. மேலும், “திடீரென இறந்த கோழிகளின் இறைச்சியை சாப்பிட வேண்டாம். ‘கோழி இறைச்சியை முழுமையாக சமைத்து சாப்பிட வேண்டும், அந்த இறைச்சியை ஆஃப்-பாயிலாக (அரைவேக்காடு) சாப்பிடக் கூடாது’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட காகங்கள் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த மாவட்ட குழந்தைகள் பிரிவு மற்றும் காசநோய் பிரிவு அருகே ஆங்காங்கே இறந்து கிடந்தது. மேலும் 10-க்கும் மேற்பட்ட காகங்கள் ஆங்காங்கே பறக்க இயலாமல் நின்ற இடத்திலேயே சுற்றுச்சுற்றி மயங்கிய நிலையில் இருந்துள்ளது. இறந்த காகங்களை மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடையுடன் அப்புறப்படுத்தி குழி தோண்டி புதைத்துள்ளனர்.

இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவிகள், காஞ்சிபுரம் அரசு மருத்துவனையில் பயிற்சி எடுத்துகொண்ட நாளில் காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகள் ஏற்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்கள் அனைவரும் கல்லூரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இரத்த மாதிரி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலருக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள் உள்ளதாகவும், இது பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சிறு உடல் உபாதை என்று சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புடனும், சிறு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் உடனடியாக முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : த.வெ.க சேலம் பேரணியில் சோகம்.. தொண்டர் உயிரிழப்பு!

ஓட்டுனர், நடத்துனர் நியமன போட்டித்தேர்வு..இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா… அன்புமணி கேள்வி
Anbumani Ramadoss

ஓட்டுனர், நடத்துனர் நியமன போட்டித்தேர்வு..இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா… அன்புமணி கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com