மாஸ்கோ, பிப்.8, 2026: ரஷ்யாவில், பாஷ்கோர்டோஸ்தான் குடியரசின் உஃபாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமான இத்தாக்குதலில், நான்கு இந்திய மாணவர்கள் காயமடைந்ததாக ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், “ரஷ்ய அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. காயமடைந்த மாணவர்களுக்கு உதவி வழங்க கசானில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உஃபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரஷ்ய பல்கலைக்கழக தாக்குதலில் காயமடைந்த நான்கு பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்ய மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒரு டீனேஜர் உஃபாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்தார்.ஷ
இந்நிலையில் அங்கு கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய 15 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டவர், உள்ளூர் குழந்தைகள் மருத்துவமனையிலும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாஷ்கோர்டோஸ்தான் குடியரசின் தலைநகரான உஃபாவில் உள்ள அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘நிபா வைரஸ் அரிதானது, அதேநேரம் ஆபத்தானது’.. உலக சுகாதார தலைவர்!
Thoothukudi : தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
717 TASMAC Shops Shut Down : தமிழகத்தில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்….
Asian Boxing Championships 2026 : ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்….
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 15 முதல் 5 நாள் அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே,…
Tamil News Updates May 12 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
AIADMK Leaderhip Row: அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்….