Zubeen Gargs death: அஸ்ஸாம் பாடகர் ஜூபின் கார்க் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு குழு அமைத்துள்ளது.
Zubeen Gargs death: அஸ்ஸாம் பாடகர் ஜூபின் கார்க் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு குழு அமைத்துள்ளது.
Published on: October 4, 2025 at 3:49 pm
கௌஹாத்தி, அக்.4, 2025: அஸ்ஸாம் பாடகர்- இசையமைப்பாளர் ஜூபீன் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்க அம்மாநில அரசு ஒரு நபர் நீதித்துறை ஆணையத்தை அமைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கௌஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சைகியா தலைமையிலான இந்த ஆணையம் ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அரசியல் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த உத்தரவை முதலமைச்சர் அலுவலகம் வெள்ளிக்கிழமை இரவு ட்விட்டர் எக்ஸில் பகிர்ந்து கொண்டது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பிரதமர் மோடி மணல் சிற்பம்.. ஆர்வத்துடன் பார்த்த முதல்வர்!
பாடகர் மரணம்
செப்டம்பர் 19ஆம் தேதியன்று சிங்கப்பூரில் கார்க் இறந்ததற்கு வழிவகுத்த “உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள்” குறித்து ஆணையம் விசாரிக்கும் என்று அது கூறியது. தொடர்ந்து, பிரபல பாடகரின் மறைவு தொடர்பாக ஏதேனும் தனிநபர், அதிகாரம் அல்லது நிறுவனத்தின் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள், விடுபட்ட செயல்கள் அல்லது கமிஷன் அல்லது அலட்சியம் இருந்ததா என்பதையும் ஒரு உறுப்பினர் குழு விசாரிக்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்.. போலீசாருடன் மோதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com