MK Stalin: “என் உடலில் உயிர் இருக்கிற வரையில்”.. என கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
MK Stalin: “என் உடலில் உயிர் இருக்கிற வரையில்”.. என கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
Published on: September 24, 2025 at 2:10 pm
Updated on: September 24, 2025 at 3:22 pm
கொளத்தூர், செப்.24, 2025: “என் உடலில் உயிர் இருக்கிற வரையில், கலைஞர் கற்றுத் தந்திருக்க கூடிய அந்த உழைப்பு என் உதிரத்தில் இருக்கும் வரை நான் என் கடமையை நிறைவேற்றுவேன்” என்றார். மேலும், “நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் நான் இருக்கிறேன்” என்றும் மு.க. ஸ்டாலின் பேசினார்.
கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க. ஸ்டாலின், “கல்வியினால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் நீங்கள் முன்னேற வேண்டும் என்று நினைப்பதில்லை. கவர்ச்சியான சொற்களை சொல்லி உங்களை பின்னுக்கு தள்ளப் பார்க்கிறார்கள். இதற்கான சூழலை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
ஸ்டாலின் இருக்கிறேன்..
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது. உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்” என்றார்.
தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் ..மேலும் இதனால்தான் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் என உறுதி எடுத்துள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க : த.வெ.க vs தி.மு.க இடையேதான் போட்டியா? உதயநிதி கொடுத்த ரியாக்ஷன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com