How to make mor kulambu | குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய மோர் குழம்பு இப்படி பண்ணுங்க.
How to make mor kulambu | குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய மோர் குழம்பு இப்படி பண்ணுங்க.
Published on: December 6, 2024 at 10:28 am
How to make mor kulambu | சுவையான மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மோர் குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் -300 ml
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வெண்டைக்காய் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு
அரைக்க வேண்டியவை
தேங்காய் -¼ கப்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
பூண்டு -2 பல்லு
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கடலை மாவு -1 டீஸ்பூன்
தாளிதம் தயாரிக்க
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு -1 டீஸ்பூன்
வெந்தயம்-¼ டீஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
வரமிளகாய் -3
சின்ன வெங்காயம் -15
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் கப் தேங்காய், இஞ்சி பச்சை மிளகாய் பூண்டு மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து மை போன்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அது நன்கு கழுவி சுத்தம் செய்து அரை விரல் நீளத்தில் வெண்டைக்காய்களை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெண்டைக்காய்களை சேர்க்கும் பொழுது ஈரம் இல்லாமல் நன்கு துடைத்த பின்னர் சேர்க்கவும்.
அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து வெண்டைக்காய்களுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெண்டைக்காய்களின் நிறம் மாறி வதங்கி வந்த பின்னர் இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த விழுதினை சேர்த்து நன்கு கலந்து விடவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும். இதனை நன்கு கலந்து விட்டு அடுப்பு தீயை ஹை ஃப்ளேமில் வைத்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பினை ஆஃப் செய்து தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்த பின்னர் இதனுடன் சேர்த்து கலந்து விடவும். தயிரை மிக்ஸியில் அடிக்காமல் சேர்த்தால் திரி திரியாக வந்துவிடும். ஒ ரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பின்னர் இதனுடன் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுக்கவும் கடுகு பொறிந்ததும் இதனுடன் வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
இவனுடன் ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கினாலே போதுமானது. பெரிய வெங்காயம் சேர்ப்பதாக இருந்தால் பாதி வெங்காயம் சேர்த்தால் போதும். தாளிதத்தை ஏற்கனவே தயார் செய்து வைத்த மோர் குழம்புடன் சேர்த்து கலந்து விடவும். இப்போது சுவையான மோர் குழம்பு தயார். இந்த மோர் குழம்பை சுடு சாதத்துடன் சேர்த்து தொட்டுக்க அப்பளம், வடகத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : 100 கிராம் பன்னீர் போதும்.. ஹோட்டல் சுவையில் வெஜ் இறால் தொக்கு ரெடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com