திருவண்ணாமலையில் மண் சரிவு ; 7 பேர் கதி என்ன ? மீட்பு பணிகள் தீவிரம்

ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

Published on: December 2, 2024 at 1:54 pm

Updated on: December 3, 2024 at 7:59 am

Tiruvannamalai landslide | ஃபெங்கல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேற்று இரவு வ. உ. சி. நகர் அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது 40 டன் எடை கொண்ட பாறை ஒன்று உருண்டு விழுந்தது.

இதில் இரண்டு வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் பாதுகாப்பிற்காக அருகில் இருக்கும் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்த வீட்டின் இடிபாடுகளில் 7 பேர் சிக்கி உள்ளனர் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீட்டின் மீது விழுந்த பாறைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வ உ சி நகரில் மேலும் ஒரு இடத்திலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

மண் சரிவால் புதைந்துள்ள வீட்டிற்குள் ராஜ்குமார் அவரது மனைவி மீனா அவர்களது குழந்தைகள் இரண்டு பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளை சேர்ந்த 3 பேர் என மொத்தம் ஏழு பேர் சிக்கி உள்ளனர் என அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்துள்ளார். சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க  கர்நாடகா – கேரளா இடையே சிறப்பு ரயில் ; ஐயப்ப பக்தர்கள் நோட் பண்ணுங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com