ஊக்க மருந்து புகார் பிரச்சனையில் பஜ்ரங் புனியாவிற்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து புகார் பிரச்சனையில் பஜ்ரங் புனியாவிற்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on: November 27, 2024 at 1:13 pm
Updated on: November 27, 2024 at 1:15 pm
Bajrang Punia banned | 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெங்கல பதக்கம் வென்றவர் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. இவர் கடந்த மார்ச் மாதம் அரியானா மாநிலத்தில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்றுக்கான இந்திய அணி தேர்வு போட்டியில் கலந்து கொண்டு அதில் தோல்வி அடைந்தார். பின்னர் ஊக்க மருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரியை கொடுக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அவரை இடைநீக்கம் செய்தது. இது குறித்து பஜ்ரங் புனியா ஊக்க மருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி இடம் முறையிட்டார்.
குற்றச்சாட்டுக்கான அறிவிப்பை வெளியிடும் வரை பஜ்ரங் புனியாவின் இடநீக்கம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஊக்க மருந்து தடுப்பு விதியை மீறியதாக பஜ்ரங் புனியாவை மீண்டும் இடம் நீக்கம் செய்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி, பஜ்ரங் புனியாவிற்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கவும் அல்லது வெளிநாட்டில் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கவும் அனுமதிக்கப்பட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க மேடை ஏறி வாறோம் ஒதுங்கி நில்லு: மீண்டும் முதலிடத்தில் இந்தியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com